Home » » 29-07-1983 - கருப்பு வெள்ளி: 30-வது நினைவேந்தல்: மறவன்புலவு சச்சிதானந்தம் தகவல் !

29-07-1983 - கருப்பு வெள்ளி: 30-வது நினைவேந்தல்: மறவன்புலவு சச்சிதானந்தம் தகவல் !

24.7 சென்னையில் இருந்து கொழும்புக்கு
26.7 வெள்ளி காலை மறவன்புலவில்

26.7 வெள்ளி மதியம் கண் கலங்கும் நிகழ்ச்சி.

1. தந்தை,
2. மகன்,
3. மச்சான்,
4. மச்சானின் தம்பி,
5. நண்பர்,
6. அவர் மகன்
ஆக ஆறு பேர். ஒருவருக்கு முன் மற்றவர் என ஒவ்வொருவராக வெட்டிக் கொலை. துண்டு துண்டாக உடல்கள்.

அவர்கள் அறுவரும் பண்பட்ட இயல்பினர், அன்பு நெஞ்சினர். அவர்கள் புல் மீது நடந்தால் புல்லுக்கும் நோகாது. அத்துணை மென்மையானவர்கள்.

1. தந்தையானவர் எனக்கு அண்ணன் முறையான சண்முகராசா, ஓய்வுபெற்ற இறைவரி அலுவலர்.
2. அவருக்கு மகன் நிருத்தன், பதின்ம வயதினர், மாணவர்.
3. சண்முகராசாவின் தாயின் தம்பி மகன் மணிவாசகர், துறைமுகத்தில் பொறியிலாளர்.
4. மணிவாசகனின் மனைவிக்குத் தம்பி முறையான சிவநேசன்.
5. சண்முகராசாவின் இறைவரி அலுவலக நண்பர் அருமைநாயகம்.
6. அருமைநாயகத்தின் மகன்.

அவர்களின் அவலச் சாவுக்கு ஒரே காரணம்,
ஒரே ஒரு காரணம், அவர்கள் தமிழர்.
கொன்ற நாள் சூலை 29, 1983, கறுப்பு வெள்ளிக்கிழமை.
இடம் கொழும்பில் கிருலப்பனைக்கும் தெகிவளைக்கும் இடையே எங்கோ ஓரிடத்தில்.

26.7 வெள்ளி மதியம் மறவன்புலவு அருள்மிகு முருகையன் கோயிலில் அறுவருக்கும் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

கலங்கிய கண்கள்,
பொருமும் உள்ளம்,
ஆற்றாமையின் ஏக்கம்,
மீளாரா மீளாரா என நெஞ்சம் நெக்குருக,
மணிவாசகரின் மனைவி விமலா வழிகாட்டலில்
கலக்கத்தை,
ஏக்கத்தை,
ஆற்றாமையை,
பொருமலைப் போக்க
முருகனிடம் வேண்டுதல்,
உற்றவர், உறவினர், நண்பர் யாவருமாய் வேண்டுதல்.

யாரொடு நோவோம்? யார்க்கெடுத்து உரைப்போம்?
முருகா உன்னைத் தவிர...

மறவன்புலவில் சோழகக் காற்று வீசும் காலம் முடிந்து
ஆடியில் மழை பெய்யவேண்டும்.
சோழகம் பலத்து வீசுகிறேதே!

மதியத்துக்குப் பின் மப்பும் மந்தாரமும்.
மாலை நேரத் தூறல்.
இரவில் இதமான குளிர்மை.

வெள்ளி மாலை அருள்மிகு பிள்ளையார் கோயிலில் தேவார வகுப்பு.

Maravanpulavu K. Sachithananthan's profile photo
tamilnool@gmail.com
Chennai

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger