Home » » இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன ?

இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன ?

இந்திய இராணுவத்திற்கு சுமார் 13000 உயர் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர் !

”போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை, 
வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை “’
போலீஸ் வேலை என்பது இராணுவத்தையுமுள்ளடக்கிப்
பொருள்கொள்ளப்பட்டதே.
எந்த வேலையும் கிடைக்காதவர்கள்தான் இவற்றில்
சேர்வதென்ற காலமொன்றும் தமிழகத்தில் இருந்தது.
ஆனால், இன்று நிரந்தரமான ஆசிரியர் வேலை, அதுவும்
விரும்பும் ஊரில் கிடைக்கும் என்றால் ஏழெட்டு இலட்சத்தை அள்ளிக்கொடுக்கப் பெற்றோர் தயாராகி விட்டனர்.
கிடைக்கும் அதிகமான சம்பளமும்,  அதிலும் கணிதம், அறிவியல் பட்டதாரியாக இருந்துவிட்டால் கிடைக்கும்   வருவாயும் சொல்லவே வேண்டியதே இல்லை.
வருமான வரிக்கும் உட்படாத வருவாய்.
அதே போன்று காவல் துறையில் எப்படியாவது உட்புகுந்து விட்டால் பதவி உயர்வு நிச்சயம் என்று, இளநிலை, முதுநிலைப் பட்டதாரிகள் கூட
காவலர் வேலையில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்
ஆண்களோடு பெண்களும் போட்டிபோட்டுக்கொண்டு சேர்கின்றனர்.

இராணுவத்திற்கு ஆளெடுக்கும்பொழுது நடக்கும்
தள்ளு முள்ளுகளை ஊடகங்கள் வாயிலாக நாமும் நன்கு அறிவோம்.
இவற்றின் மூலம் மேற்சொன்ன பழமொழி பொய்யாகிப்போய்விட்டது
 என்பது எவருமே மறுக்க முடியாத உண்மை. 
இராணுவத்திற்கு சுமார் 13000 உயர் அதிகாரிகள் இன்றைக்கும்

தேவைப்படுகின்றனர்.  இருப்பினும் இந்த நல்வாய்ப்பினைப்.பயன்படுத்திக்

கொள்ள முயல்வோரின் எண்ணிக்கை நாட்டில்   மிகவும் குறைவாகவே

உள்ளது.எனவே, இராணுவத்தில் சேர்வதற்கான  வழிமுறைகளை முதலில்

கூறுவது எமது கடமையாகின்றது..


இயல்பாக இந்திய  இராணுவத்தில் சேர்வதற்கு 6 வழி முறைகளே உள்ளன. 


1. Rashtriya Indian Military college  ( RIMC ) 
     
       நாட்டில் ஒரே ஒரு இடத்தில்தான் உள்ளது.

       Shaheed Kashmir Singh Rd, 

     Garhi Cantonment  Dehradun, 

     Uttarakhand 248003
     

      0135 275 1355

Only 25 Cadets are admitted every six-month. Candidates should not be less than 11.5 years of age or must not have attained the age of 13 years on 01 (Jan) and 01 (July) of the term they join. Admissions are made to Class VIII only. The Candidate must be studying in Class VII or above in a recognized school at the time of joining. Application forms are to be submitted to respective State governments. Candidates are selected on the basis of their performance in an All India Entrance Examination held twice a year comprising a written examination consisting of test papers in English (125 marks), Mathematics (200 marks) and General Knowledge (75 marks), successful candidates are called for Viva - Voce test (50 marks). A merit list is prepared and those who qualify are sent for medical examinations. Those finally cleared are invited to join up.

http://www.rimc.org/admission.html


2. Sainic School   மாநிலம் தோறும் உள்ளன 


Sainik School
AmaravathiNagar - 642 102
Udumalpet Taluk, Tiruppur District
Tamil Nadu.
Phone : +91 4252 256296 [Principal] , 256206 [Head Master], 256246 [Registrar]
School E-Mail mailtosainik@yahoo.com
           
Sainik school, Amaravathinagar is an English medium, residential school for boys providing Public School Education with a military bias, located at Udumalpet, Tirupur Dist, Tamil Nadu. The school was formed with a clear objective of providing high-quality public school education and leadership & discipline training to handpicked children and groom them to become officers in the Defence Services of the country. The aim of the School is to enroll as many cadets as possible into the NDA (National Defence Academy).[more..]

http://sainikschoolamaravathinagar.edu.in/home.html


3. Military school 

நாட்டில் ான்கைந்து இடங்களில் மட்டுமே உள்ளன


Bangalore Military School (Rashtriya Military School Bangalore or King George Royal Indian Military College) is a residential school in Bangalore, Karnataka, India, [1] established on 1 August 1946. Bangalore Military School is one of the only five institutions of its kind in India; the other four being Ajmer Military School, Belgaum Military School, Chail Military School and Dholpur Military School. The cadets enrolled in these schools are known as Georgians, after their founder father King George. [2]

4. General Public School  

 பல்வேறு இடங்களில் உள்ளன                                                      

 5.National Defence Acadamy              

The National Defence Academy (NDA) is the Joint Services academy of the Indian Armed Forces, where cadets of the three services, the Army, the Navy and the Air Force train together before they go on to pre-commissioning training in their respective service academies. The NDA is located in Khadakwasla near Pune, Maharashtra. It is the first tri-service academy in the world and is rated amongst the best in the world.

NDA alumni have led and fought in every major conflict in which the Indian Armed Forces has been called to action since the academy was established. The alumni include 3 Param Vir Chakra recipients and 9 Ashoka Chakra recipients. 





அதிகாரியல்லாதோர் பதவிகள் முறையே :-
சிப்பாய் , லான்ஸ் நாயக், நாயக், ஹவில்தார், நாயப் சுபேதார், சுபேதார், 
சுபேதார் மேஜர், கெளரவ அதிகாரி -லெப்டிணண்ட், 
கெளரவ அதிகாரி - கேப்டன்.
 
அதிகாரிகள் பதவிகள் முறையே :- 
லெப்டினன்ட்,  கேப்டன்,  மேஜர்,  லெப்டினன்ட் கர்னல்,  பிரிகேடியர், 
மேஜர் ஜெனெரல்,  லெப்டினன்ட் ஜெனரல்.  ஜெனரல், 
Field Marshal ( கெளரவப் பதவி )     
மேற்கண்ட ஆறு வழிமுறைகளிலும் இல்லாமல்  இந்திய இராணுவத்தில் உயர் அதிகாரியானது எனது வியப்பான அனுபவம்.:-

இராணுவ அதிகாரிகளின் வாழ்க்கையின் அருமைபெருமைகளை  அனுபவமே
உணர்த்திடும். சென்னை மாம்பலத்தில் “ கோபாலன் தெரு” என்று ஒரு இடம் உண்டு. மிகவும் நேர்மையாகச் செயல்பட்டு மறைந்துபோன
 Deputy Collector மேதகு கோபால் படையாச்சி அவர்களின் நினைவாக அந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவர் எங்கள் குடும்பத்திற்கு சற்றே அறிமுகமானவர். அந்த நாட்களில் தம்பிகளின் படிப்பு விபரம் பற்றிப் பேசுவதற்கு எங்கள் அண்ணன் அவரைத் தேவைப்படும்பொழுதெல்லாம் சந்தித்து அவரது அறிவுரையைக் கேட்பார். நானும் சில முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். அவரது அறிவுரைப்படியே  
Madras Public Service Commission - தேர்வில் தேர்ச்சி பெற்று, பொதுப்பணித்துறையில் , Junior Engineer ஆகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். குடும்பத்தினர் எல்லோருக்குமே பெருமகிழ்ச்சி.

1962 அக்டோபர்- நவம்பர் சீனா இந்தியாவின் மீது படைஎடுத்ததால், போர் இந்தியாவின் மீது வலிந்து திணிக்கப்பட்டது. போர் முடிவிற்கு வந்த நிலையில், மாநில - மத்திய அரசுகளில் பணியாற்றுவோரில்  தகுதியும் திறமையும் படைத்தோர் இந்திய இராணுவத்த்தில் அதிகாரிகளாகச் சேர்ந்திட அழைப்பு விடுக்கப்பட்டது.  துடிப்பான எனது உள்ளுணர்வு எப்பொழுதும்   வீர தீரம் நிறைந்த இராணுவ வேலையிலேயே நாட்டம் கொண்டிருந்தது.

ஆகவே, நிரந்தரமான பொதுப்பணித்துறை வேலையை உதறித்தள்ளிவிட்டு, உரிய தேர்வுகளில் எல்லாம் தேர்ச்சி பெற்று இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சியில் சேர்ந்தேன்.பின்னர், செயலுரிமைக் கட்டளை பெற்று அதிகாரியாகப் பொறுப்பேற்று
 3, மே, 1964 ஆம் ஆண்டு முதல், 2, நவம்பர் 1987-ஆம் ஆண்டு வரையிலான 23 ஆண்டுகளில் 
2nd Lieutinent ஆரம்பகால Rank முதல் Colonel பதவி வரையிலான எல்லா நிலைகளிலும்  4 Engineer Regiment என்ற பொறியியல் படைப்பிரிவில் பணியாற்றியுள்ளேன். எனது வாழ்க்கைச் சீரமைப்பில் அந்த படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ( Officers ), இளநிலை அதிகாரிகள்
 (  Junior Commissioned Officers )  மற்றும் அதிகாரிகளல்லாத பணியாளர்கள் போன்றோர்களின் பங்கு மகத்தானது.

18, நவம்பர் ,1987 -இல் தமிழகத்திலிருந்து புறப்பட்டு
02, மார்ச்,1989 ஆண்டுகளில்,  
அண்டார்டிகா ( தென்துருவம் ) -வில் உள்ள,
“தக்‌ஷின் கங்கோத்ரி “  என்ற இந்திய ஆய்வு மையத்தின் தலைவராகத் திகழும் வாய்ப்பைப் பெற்றது  எமது வாழ்விலோர் அதிசயம்!

உலகிலேயே கொடுமையான குளிரும் ( -89.6C ), பனிக்காற்றும் ( 300 KM/Hr ) நிறைந்த அண்டார்டிகா ஒரு உலக அதிசயம். 480 நாட்கள் உலகத்துடன் எந்தத் தொடர்பும் இன்றி  எமது தலைமையில் இயங்கிய இந்திய ஆய்வுக் குழு மகத்தான சாதனைகள் புரிந்து அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளின் தென் துருவ ஆய்வுக் குழுவினரின் பாராட்டுதலைப் பெற்று நாடு திரும்பினோம்..

திருவாரூர் மாவட்டம் சன்னா நல்லூர் என்ற கிராமத்த்தில் 
பாவாடை - தெய்வானை என்ற விவசாயத் தம்பதியருக்கு நான்காவதாகப் பிறந்த  சாதாரண பா.கணேசன் கர்னல் கணேசனாக  உலகம் போற்றுமளவிற்குப் புகழ்பெற்றுத் திகழ்வதற்கு அடிப்படைக் காரணம், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி   யான்  இராணுவ அதிகாரியானதுதான்.

வட இந்தியாவில் சாதாரண B.A. பட்டம் பெற்றவர்கள் உயர் இராணுவ அதிகாரிகளாக உலா வருகின்றனர். தென்னிந்தியா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள்  பெரும்பாலும் சிப்பாய்களாகவே வலம் வருகின்றனர். இன்றைய வேலை இல்லாத இளைஞர்கள் மனம் வைத்தால் ஒவ்வொருவருமே  என்னைப் போன்று கர்னல்  ஆகலாம்.. ஏன் ? அதற்கு மேலும் பதவி உயர்வுகள் பெறலாம்.

 
இராணுவம் அழைக்கிறது “ 

கர்னல் பா.கணேசன்
முன்னாள் தலைவர், இந்திய தென்துருவ ஆய்வு தளம்
தக்‌ஷின் கங்கோத்ரி 
pavadai.ganesan@gmail.com

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி ) லிட்,
சென்னை- 600 098
044- 2635 9906, 2625 1968

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger