Home » » அகர வரிசையில் அற்புதக் கலம்பகம் - தகவல் - V. விஸ்வநாதன்

அகர வரிசையில் அற்புதக் கலம்பகம் - தகவல் - V. விஸ்வநாதன்


வாசிணவ ஆச்சாரியர்களுள் ஒருவர் அழகிய மணவாளதாசர். இவரைப் "பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்' என்றும் கூறுவர். எட்டு நூல்களின் தொகுப்பாய் அமைந்த நூல்தான் இவர் இயற்றிய அஷ்டப்பிரபந்தம். இதிலுள்ள நூல்களுள் ஒன்று திருவரங்கக் கலம்பகம்.

இந்நூலில் உயிரெழுத்துகளைக் கொண்டு அகர வரிசையில் ஓர் அற்புதமான பாடலை இயற்றியுள்ளார். இதில் திருமால் அருள்பாலிக்கும் திருத்தலங்களைப் பற்றியும் அவனுடைய திருப்பெயர்களின் மகிமையைப் பற்றியும் விரித்துரைத்துள்ளார். அந்த அகர வரிசைப் பாடல் வருமாறு:

அ ரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை

ஆ லிமா முகிலை வாலி காலனை

இ ந்த ளூருறை எந்தைபெம் மானை

ஈ சன் நான்முகன் வாசவன் தலைவனை

உ ள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை

ஊ ரகம் நின்றருள் நீரகத் தடிகளை

எ வ்வுள் மாயனைத் தெய்வநா யகனை

ஏ ர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை

ஐ வாய் அரவில் அறிதுயில் அமலனை

ஒ ருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே!

ஓ தநீர் ஞாலத் துழலும்

ஒü வியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே! 

                                                                        




முதல் பாராவைப் படித்தல் அவசியமாகின்றது.. 

நன்றி :- தமிழ்மணி, தினமணி, 14-07-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger