Home » » சென்னை திருவான்மியூரில் இலவச தமிழ் இலக்கிய இலக்கணப் பாடசாலை

சென்னை திருவான்மியூரில் இலவச தமிழ் இலக்கிய இலக்கணப் பாடசாலை



காஞ்சி சங்கரமடம் சார்பில் சென்னை திருவான்மியூரில் ஞாயிறுதோறும் இலவச தமிழ் இலக்கண, இலக்கிய பாடசாலை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சங்கரமடம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மரபுவழியான இலக்கண, இலக்கியம், புலமைக்கான செறிவும் தெளிவும் நிறைந்த சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் முதலியவற்றைப் பயில ஞாயிறுதோறும் சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் சங்கர வித்யாலயாவில் வகுப்புகள் நடைபெற உள்ளன.

மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்துவர்.

ஞாயிறு மட்டும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் வகுப்புகளுக்கு அனுமதி இலவசம்.

மேலும் விவரங்களுக்கு காஞ்சி ஸ்ரீ சங்கர மடம்: 98408 33575, பேராசிரியர் ம.வே.பசுபதி: 94448 81281 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.                     

நன்றி ;-தினமணி, 03-08-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger