Home » » பிரீ-பெய்டு ஆட்டோ :சில மணி நேரங்களில் சுமார் 250 பேர் முன்பதிவு, சென்னை !

பிரீ-பெய்டு ஆட்டோ :சில மணி நேரங்களில் சுமார் 250 பேர் முன்பதிவு, சென்னை !







தமிழக அரசு அண்மையில் அறிவித்த ஆட்டோ கட்டணத்தின்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக சுமார் 3 ஆயிரம் ஆட்டோக்கள் கொண்ட பிரீ-பெய்டு ஆட்டோ சேவை 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இயங்கி வந்தது.

சென்ட்ரல் அருகே நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணி காரணமாக கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி முதல் இந்த சேவை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ரயில்வே ஏ.டி.ஜி.பி. சேகர் உத்தரவின்பேரில், போக்குவரத்து மாநகர போலீஸôருடன் ரயில்வே எஸ்.பி. கயல்விழி மற்றும் ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் - ஆட்டோ டிரைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சென்ட்ரலில் மீண்டும் பிரீ- பெய்டு ஆட்டோக்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே பிரீ பெய்டு ஆட்டோக்கள் இயங்கி வந்த அதே இடத்தில் கூடுதல் இடமும் ஒதுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை முதல் மீண்டும் பீரீ-பெய்டு ஆட்டோ செயல்படத் தொடங்கியது. மேலும் தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள புதிய ஆட்டோ கட்டணத்தின்படி பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கும்படியும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பிரீ-பெய்டு ஆட்டோ தொடங்கப்பட்ட சில மணி நேரங்களில் சுமார் 250 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.
 
நன்றி :- தினமணி-14-09-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger