Home » » புலவராற்றுப்படை -குலாம்காதிறு நாவலர்

புலவராற்றுப்படை -குலாம்காதிறு நாவலர்

http://www.tamilvu.org/library/l5H00/html/l5H00ind.htm

http://www.tamilvu.org/slet/l5100/l5100pd1.jsp?bookid=121&pno=11

மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவராற்றுப்படை

மூலமும் உரையும்
ஆசிரியர்:
மகாவித்துவான்
வா. குலாம் காதிறு நாவலர்.


   பரிதிவெயி லெறிக்கும் விரிவுறு வெளிக்கீழ்
   விளிங்கனி நின்றாங்கு நின்று துளங்கிய
   மருணீர் மணியென வுருணீ ரும்ப
   ரடர்ந்துமண லாடையிற் படர்ந்தன் றாகலிற்

05.கருங்கடற் றெனுமிவ் விருங்கண் ஞாலத்துப்
     பரத கண்டம் பண்ணிய விரதந்
     தனிமையென் பெயர்த்தா யினிமையென் பொருட்டா
     யுத்தர மொரீஇத் தக்கணம் போந்தெனக்
     கங்கைச் சடைய னொருபாக மங்கையன்

10  சமயப் பொதியத் தமர்முனி யகத்தியற்
     காய்ந்துதர வுணர்த்திப் போக்கப் போந்த
     வேர்ந்துணர் மாந்தர்க் களிக்கு மீர்ந்தமிழ்
     முழுதுணர் சிறப்பிற் பழுதுதீர் புலவ
    வொன்றுநின் னுள்ளங் குன்றுதக விரியக்

15 கேளா யத்தை கிளக்குவல் வாளா
     மன்னிய வொருநீ யன்ன யானும்
    பொருந்துறு புகழி னருந்தமிழ் நசைஇ
    மதனுடை முந்துநூ லதன்வழிப் பட்ட
    தொல்காப் பியமுதற் பல்காப் பலவென

20 விலக்கணந் தெரிக்கும் விலக்கினூ றேர்ந்து
    பொற்புறு மெழுத்துச் சொற்பொருள் யாப்பு
   விழுமிய வகையி னணியிவை பழுநி
   யெஞ்சலில் சீர்த்திப் பஞ்சகா வியம்பிற
   வெட்டுத் தொகையொடும் பத்துப் பாட்டொடு

25 மின்பமர் கீழ்க்கணக் கொன்பதிற் றிரட்டியெனச்
     சங்க மரீஇய பொங்குநூ றேற்றி
    மறையில் கேள்வித் துறைபல் போகிப்
   பாவினம் யாத்தற்கு வாய்வளங் கூர்ந்தனன்
   கற்றுணர் மாக்க ளருமை யிற்றென

30 வளந்தறிந் ததனை யுளந்தகத் தெரிந்து
     பொன்னு மணியு முன்னாட் சிதறித்
     தம்பெயர் விட்டன ரிம்பரின் மாய்ந்த
    பாரியுங் காரியு மாயு மோரியும்
    பேகனு நள்ளியு மதிகனு மாகி

35 வரையாது கொடுத்தோர் வாணா ளீதன்
     றரையருந் தமிழ ரல்ல ராகலி
    னற்றமிழ் மாட்சியுங் கற்றவர் மாட்சியும்
    புரிந்துளங் களிப்பத் தெரிந்தாங் கருண
   ரில்லென் கவற்சியிற் புல்லென் முகன்கண் 

40 டுடுக்கையு முண்டியு மிருக்கையு முசா அய்க்
    கொடுக்குநர் யாரென் றடுக்குமவர் கரப்பக்
   கூடம் போன்ற கோபுர நிரையொடு
   மாடஞ் சான்ற மதுரைமா நகர்க்கண்
   முந்திய சங்க மூன்றொன் றாகிப்
   பிந்திய சங்கம் பிறந்த தாலெனத் 

45   கண்ணின் மாக்கண் முன்ன ரெண்பட
      வியன்மணி நீரையிற் செயன்மணி விராஅய்க்
      கிடந்திமைத் தாங்கு மடந்தகழ் பவர்மு
     னிருவருந் தகைமையி னொருவரெனக் கலாவி
     யறியா ரென்னாப் பெருஞ்சுட் டுறீஇப்

50  போலிப் புலமையர் திரியுமிக் காலத்துப்
     புனைநூ லுணரா வனைய ரானு
     நறவோர் வாழ்க்கைப் பறவையின் விழைஇ
    யருங்கலை பலவு மொருங்குடன் றுரீஇ
    நன்மையிற் பயிலுந ரின்மை யானும்

55 பயிலுநர் சிலரே யாகிப் பயில்வுழிப்
     புரத்தன் மாலையர் கரத்த லானு
     நன்றுறு தமிழ்வளங் குன்றுதக வுணர்ந்து
    பண்டையிற் சிறந்தது தழைப்பக் கொண்டு
    வானம ரதனை வளர்ப்பல் யானென

60வஞ்சிறைத் தும்பி துஞ்சி யூதப்
    பிணியவிழ் பலர்ந்து சுழல்காம் பணிமலர்
   வன்னக் கம்பலம் விரித்தாங் கன்ன
    தரைபடர்ந் திமைக்கும் விரைகெழு பூம்பொழி
    லிருமருங் கொழுகிய பொருகரை வையைச்

65.செந்தமிழ் நாட்டுத் திருத்தகு மூதூர்
    பைந்தமிழ் வளர்த்த பாண்டிய ரிருக்கை
    நடைமாண் புரவியுந் தொடைமான் றேரும்
    பணையிரு கோட்டி னிணையெருது பிணித்த
    பாண்டிலுஞ் சிவிகையுஞ் சிறுகண் யானையுங்

75  தண்டமிழ் விரிக்கும் பண்டைநூ லெழும்ப
     வியனனி விழைகுநர் குழீஇனர் பயில
    மால்செய் கல்வியர் மாண்பி னூல்செய
   வுரைகாண் வல்லுநர் வரைகாண் டெழுத
   முறைபிறழ்ந் துற்ற குறைபல் காண்மார்

80  முதுநூ றேண்டிப் பழுதாய்த் தமைக்கக்
      குற்றம் போகிய கற்றன கெடாஅப்
      பேணூஉ வைகுமோர்ப் பரிக்கை காணூஉச்
    சிறப்புப் பெயரொடு பரிசிலு மளிப்பப்
    பின்னும் வேண்டுவ வென்னவும் புரிய

85 மங்கலி லருந்தமிழ்ச் சங்கமொன் றிரீஇனன்
   குமரிமருங் குற்ற நிமிர்திரை முரியுஞ்
   சேது காவலர் திறற்குடிப் பிறந்தோன்
  றீதுதீர் வாழ்க்கைத் தென்புலங் காப்போன்
  மறங்காண் பகைவர் வணங்கிய புறங்காண்


90மஞ்சுவரு மேற்றி னஞ்சுவரு திறலினன்
  புலவர் வம்மின் பொருநர் வம்மின்
  லர்புகழ் கூத்தரும் பாணரும் வம்மின்
  போராக் கதவதிப் புரவலன் வாயிலென
 வேரார் வான்கொடி நுடங்குபு நுடங்கி

95 யகவையம் மாடத்து முகவை யூரன்
     மேலறி வுயர்ந்த நூலறி புலவன்
    முத்தம் விளைவயற் பாலவ னத்த
    நாடுசெகிற் கொண்டு பீடுகெழு குடிதழீஇ
   முற்றக் காக்குங் கொற்றக் குடையினன்
1

100  விரைகமழ் கண்ணியன் பாண்டித் துரையெனக்
        கேட்டனெ னன்றே கெட்டதென் கவற்சி
       வேட்டன வடைதல் விளிவுறா தாலெனக்
      கதுமென வெழுஉச் சினைகொள் புதுமலர்
     வண்டுந் தேனு முண்டன களிப்ப



105 நறவிருந் தளிக்கும் புறவுறழ் சோலை
       வளனற வறியா மல்லலம் முதுநகர்
      மாண்புறப் புகூஉக் காண்பன கண்டு
      செந்தமிழ் விளங்குமச் சங்கம் போஓய்
     நல்லிசைப் புலவர் சொல்லிசை பரப்பக்
    முன் பக்கம்     மே110     கூண்டினி திருக்கு மவைக்களங் குறுகி
    யாண்டியான் யாத்த கவியரங் கேற்றி

110 கூண்டினி திருக்கு மவைக்களங் குறுகி
      யாண்டியான் யாத்த கவியரங் கேற்றி
     யுலகுசொல் சிறப்புப் பெயரொடு பெறாஅ
    வரிசை யான்ற பரிசிலும் பெறூஉ
    வந்தனென் யாஅரெனக் கண்டறிந் தவரே


115  நீயிருஞ் செல்லிய ராண்டுப் பலபெற
      மேயினி ரெனினே யின்னே விட்டிவ ட்
      காலிற் செல்லி னாளிற் செல்லு
      முருமுறுமோ டுறலொழியி
     னிருபுறனு மிருப்புருளை

120 நான்குருளக் கான்குழுமும்
      வாஅய்க்கொள்ளிப் பேஎயுயிர்ப்பி
      னொலித்துமிழுங் கலித்தூமங்
      குழல்வாயிற் சுழல்கொள்ள
     மரவட்டைச் செலவொப்பச்


125  செல்பாண்டில் பல்கோத்த
       நெடுந்தொடரி னிரைநீண்டு
      கடுங்காலிற் கழிவிசையி
      னெந்திர வூர்தி யிவர்ந்தனிர் படர்மி
     னந்தமில் காட்சி யணிபல காண்பிர்


130   வீறிய மாக்க ளேறிறங் கிடன்றொறு
        மூறிய வமிழ்தி னுண்டிபல் பெறுகுவிர்
        பன்னா ணடந்தனிர் மன்னா தெய்க்குங்
       காலுழப் பறியா மாலுறு செலவின்
       மலைப்புறு நெடுவழி யொருநா டொலைச்சிச்

135 சூடிய நறுமலர் வாடிய லுறாமு
      னிதிமலி கூடலம் பதிவயிற் புகுவி
     ராவயிற் போந்து கூரயி லேந்திய
    முடியுடை வழுதியர் முறைவழி யிருந்த
    கொடிநுடங் கெயிலிற் கோயின் மறுகு

140 மாலய வீதியு மாவண வீதியு
       மறிந்தவர் வியக்கு மாண்மையர் மலிந்து
      செறிந்தமர் தெருவுந் திருவொடுங் காண்பிர்
     கண்டனிர் பின்றைத் திண்டிறற் புலவர்
     கூடுறு சங்க நாடினிர் செலினே

145  யாயிரங் கதிர்கொள் பருதி ஞாயிறு
      திருந்துவரைச் சிகர மீமிசை யிருந்தெனக்
     கரும்பனைக் கையின் வேழத் தொருவெரி
    நுவவு மதிவட்டத் தவவில்குடை நிழற்ற
   வருமிறை யிவனெனப் பொருவறு விதியி

150   னரப்புவகை பிழையா நான்குவகை பரப்பிய
        யாழிற் பாண ரேழிற் பாட
      விரண்டுபத் தடுக்கி யொன்றுகடை வைத்த
     வண்மைய ரொருவடி வண்மின ரெடுத்தென
     வான்கவி வாணர் நான்கிற் பாடப்


155  பொன்முடி கவித்து வென்வே லேந்திப்
       பாண்டிநா டளிக்கும் பண்பி னாண்டகை
      யிரவலர்க் கடையா வாயிற் புரவலன்
     கோதுபதி யொடுக்கும் பாற்கர சேதுபதி
    யருளொடு நிலைஇயர் பொருணனி யுதவ


160     வன்னவன் பெயரொடு மன்னுபெயர் கொண்டு
          சங்க மேவுமோ ரங்க மாகி
         யூணுடை யேனைய மாணவர்க் கார்த்தி
       நல்லா சிரியர் பல்லோர் வைகினர்
      தொன்னூ லொருசிறை யொருசிறைப் பின்னூ


165     லோவிறந் துணர்த்துந் தாவில் கொள்கை
          யழகமர் காட்சிக் கழகமுங் காண்பி  
          ரிலக்கியத் தனவு மிலக்கணத் தனவு
         மலக்கண் டீர்க்கு மாகமத் தனவுமென
        முதியவு மான்ற முறைமையி னமைந்த


170     புதியவு மாகிப் பொலிந்துற்று நசைஇ
          யோரு மாக்க ளுள்ளந் தேரும்
         பாண்டியன் சுவடிச் சாலையுங் காண்பிர்
         தென்மொழி யெழுத்தொடு வடமொழி யெழுத்து
        மீங்குநனி பாய வாங்கிலாக் கரமுங்


175     கால்கொள வாக்குபு பால்வேறு படுத்தி
          யொன்றுபல வாகிச் சென்றுறப் பதிக்கு
          மச்சுச் சாலையு மெச்சக் காண்பிர்
         கண்டனிர் சங்க மண்டபம் புகினே
        தீந்தமிழ்ப் புணரி மாந்திய மக்களும்

180     வடமொழி தேர்ந்து திடமுறு பவரு
           மாங்கிலம் பயின்ற பாங்கரு மாகிப்
          புரையறு நூல்கட் குரைசெய் குநரு
          நால்வகை பயக்கு நூல்செய் குநரு
        மோரா முதுநூ லாராய் குநருமெனப்

185     பெரும்புலவர் மருங்கமர
           மண்டுடுவில் வெண்டிங்களுந்
           தரங்காட்டி யரங்கேறிய
           பயில்சிறப்புப் பெயரெய்திய
          வறப்பரிசி லுறக்கொள்ளிய

190     நிலைபயிலுங் கலைபயிலிய
          தவமலியு மவர்நடுவட்
         கருங்கடலிற் செஞ்ஞாயிறும்
        பொரத்தலைமை கொளத்தவிசில்
       விரைப்பாண்டித் துரைத்தேவ

195     னாற்றல்சால் சிறப்பி னாங்கவீற் றிருக்குங்
          காட்சி கண்டனிர் களித்தனி ரண்மின்
          மாட்சியி னவனே மலர்ந்த முகத்தினன்
          யாரை நீயிரென வினாவு மோ ரையிற்
          போந்தனென் பெருமநின் னவைக்கள மோர்ந்தெனின்


200 வருகெனத் தழீஇ யிருக்கென வருகிரீ இப்
போற்றினிர் சென்றநுங் கவியரங் கேற்று
நச்சியாங் கிருக்குந ருளப்பட மெச்சி
வாயரும் புலவன் பெருங்கவி ராயன்
பாவலன் வித்துவா னியறெரி நாவல
205 னென்றுயர் பெயர்களு ளொன்றுற நுமக்குக்
களிவர நல்கி யூர்கோ ளொருதலை
மீனிருந் தென்ன வானிற வயிர
மின்செய் தொளிறும் பொன்செய் யாழியும்
பொலந்தகடு குழித்துப் பொற்புற வமைத்த
210 வலந்த பொற்றொடரின் மாண்பிற் றாகிப்
பழுதறச் சமைந்த பொழுதறி கருவியு
நொய்ம்மயி ராய்ந்து துய்யென நெய்த
மின்னிவர்ந் தென்ன பொன்னிழை நுழைத்த
மாசுகெடச் சிறந்த காசு மீரமும்
215 விழுத்தலை யமைத்த கழுத்தள வரையன்
பணயம் பலவு மிணையறத் தரீஇப்
பெருகிய மகிழ்விற் பேணுபு விடுக்கும்
வருகுவிர் மாதோ வளமலி தன்மையிற்
செம்பொன் பழுநிய செழுமரன்
220 வம்பொடும் பொலிந்து வந்ததா லெனவே.
                     இதன் பொருள்
     புலவரிடத்து ஆற்றுப்படுத்தலானே இது புலவராற்றுப்படை
யெனவாயிற்று; முருகாற்றுப்படை என்றாற்போல. எனவே, மதுரைத் தமிழ்ச்
சங்கப் புலவரிடத்துச் சென்று சிறப்புப் பெயரும் பரிசிலும் பெற்றானொரு
புலவன் அவை பெறாதானொரு புலவனுக்குப் பெறுமாறு கூறி, அவனை
அவரிடத்து வழிப்படுத்தியதென்பது இதன் பொருள்.


0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger