Home » » பிளஸ் 2 இயற்பியல் வினாத்தாள் எளிமை: ஏராளமானோர் முழு மதிப்பெண் பெற வாய்ப்பு

பிளஸ் 2 இயற்பியல் வினாத்தாள் எளிமை: ஏராளமானோர் முழு மதிப்பெண் பெற வாய்ப்பு


பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தின் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் ஏராளமான மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுதான் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

பிளஸ் 2-வில் முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் இயற்பியல் பாடத்துடன் திங்கள்கிழமை தொடங்கின. முதல் பாடமான இயற்பியல் வினாத்தாள் எளிமையாக இருந்ததால் பெரும்பாலான மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு மையங்களை விட்டு வெளியே வந்தனர்.

தேர்வு தொடர்பாக ஆசிரியர்கள் கூறியது: இயற்பியல் பாடத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்த கேள்விகளே அதிகளவில் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டு ஒரு மதிப்பெண் வினாக்களும் எளிமையாக இருந்தன. இதனால், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இந்த ஆண்டு 200-க்கு 200 மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

அதேபோல், பொருளாதாரப் பாட வினாத்தாளும் மிகவும் எளிமையாக இருந்தது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

36 பேர் சிக்கினர்: மாநிலம் முழுவதும் இயற்பியல், பொருளாதாரப் பாடங்களில் காப்பியடித்ததாக 36 மாணவர்கள் திங்கள்கிழமை பிடிபட்டனர்.

இயற்பியல் பாடத்தில் 6 மாணவர்களும், பொருளாதாரப் பாடத்தில் பள்ளிகளின் மூலமாக தேர்வு எழுதும் 6 மாணவர்களும், தனித் தேர்வர்கள் 24 பேரும் காப்பியடிக்கும்போது பிடிபட்டதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாவட்டத்தில் பொருளாதார பாடத்தில் காப்பியடித்ததாக 11 தனித் தேர்வர்கள் பிடிபட்டனர். அதற்கடுத்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் 8 தனித் தேர்வர்கள் சிக்கினர்.

தினமணி

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger