Home » » இத்தாலி மொழியில் புலமை பெற்ற தமிழ்த் தலைமுறை வாழும் மாநிலம் இரிசினோ !

இத்தாலி மொழியில் புலமை பெற்ற தமிழ்த் தலைமுறை வாழும் மாநிலம் இரிசினோ !

 
இத்தாலி மொழியில் புலமை பெற்ற தமிழ்த் தலைமுறை வாழும் மாநிலம் இரிசினோ (சுவிற்சர்லாந்து).
300 இல்லங்கள், தமிழர் தொகை 1200.

20 வயது வரை உள்ள தமிழ்த் தலைமுறையினர் அனைவரும் இத்தாலி மொழி பயின்றவர், அவர்களுட் பலர் அம்மொழியில் புலமையாளர்.

அவர்களுள் பலர் தமிழிலும் புலமையாளர். 10ஆம் வகுப்பு வரை தமிழைப் பாடமாகப் படிக்கின்றவர். தேர்வு எழுதி, அதில் வரும் மதிப்பெண்கள் மாநிலத் தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்துக் கூட்டலாகும். மேற்படிப்புக்கு இம் மதிப்பெண் கூட்டல் உதவும்.

இரிசினோ மாநிலத்தில் மூன்று தமிழ்ப் பள்ளிகள், 300 மாணவர்கள். வார இறுதி ஞாயிறு தமிழ்ப் பள்ளி நாள்.

19.10.2013 நன்பகல் 1400 மணிக்கு இரிசினோ மாநிலத் தலை நகர் உலுகானோ நகரில் வாணி விழா.

பிற சொல் கலவாமல் தமிழைப் பேசுவோருக்காக ஒரு போட்டி. 15-18 வயது இளையர் கலந்தனர்.

இசை, நடனம், பேச்சு, கிண்டல் உரை என மழலைகள் தொடக்கம் இளையோர் வரை கலந்துகொண்ட பல்சுவைத் தமிழ் நிகழ்ச்சிகள்.

சுவிற்சர்லாந்து நாட்டில் மக்களால் தேர்வான ஒரே ஒரு தமிழர். வாவு மாநிலத்தின் உலவுசோன் மாநகராட்சி உறுப்பினர் திரு. நமசிவாயம். சுவிற்சர்லாந்தின் முதல் தமிழிதழ் உதயதாரகை. தொடங்கியவர் நமசிவாயம். இலங்கையின் திரைப்படம் குத்துவிளக்கு. அதில் கதாநாயகனாக நடித்தவர் அச்சுவேலி கதிரிப்பாய் தம்பிப்பிள்ளை நமசிவாயம்.

உலுகானோ வாணி விழாவின் சிறப்பு விருந்தினர் நமசிவாயம். விழாவுக்கு என்னை அழைத்துச் சென்றார்.

படங்கள் பார்க்க.  

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger