Home » » மரபணு சோதனையாளர்களின் இணையதளம். ( உங்கள் DNA-சோதனைக்கு உட்படுத்தலாம் )

மரபணு சோதனையாளர்களின் இணையதளம். ( உங்கள் DNA-சோதனைக்கு உட்படுத்தலாம் )

முக்குலத்தோர்களே முதல் தமிழர் - மரபணு சோதனை ஆய்வு


                                                 -
மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி எனினும் அறிவியல் அந்த மர்மத்தை கண்டுக்கொள்ள மிக நீண்டதொரு சிரமத்துடன் பயணக்கிறது.அப்படிப்பட்ட பயணத்தில் ஒரு ஆச்சிரியத்தை கண்டுப்பிடித்தது!
மரபணு சோதனை
ஒரு இனத்தின் பிறவிடத்தையும் அவர்கள் வம்சாவிழிகளையும் அறிய உதவும் அறிவியல் நுட்பம் தான் மரபணு சோதனை எனப்படுவது.
M130 - என்பது உலகில் தோன்றிய முதல் மனித இனத்தின் கலப்பற்ற மரபணு. உலகளவில் மரபணு ஆராய்ச்சிகள் மிக தீவிரமாக நடந்துவரும் நிலையில் இந்தியாவும் FamilyTreeDNA என்ற அமைப்பு மூலம் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்டுள்ளது.
தமிழகத்தில் மரபணு ஆராய்ச்சி
FamilyTreeDNA அமைப்பின் உறுப்பினராக இருக்கும் பேராசிரியர் பச்சையப்பன் (மதுரை காமராஜர் பல்கலைகழகம்)மதுரை அருகிலுள்ள உசிலம்ப்பட்டி கல்லூரி மாணவர்களிடம் இந்த மரபணு சோதனையை மேற்கொண்டார். அந்த மரபணு ஆராய்ச்சியில் ஒரு உண்மையை பேராசிரியர் அறிந்தார். M130 எனும் முதல் மனிதன் மரபணு வகை ஆண்டித்தேவரின் மகன் விருமாண்டியின் மரபணுவோடு ஒத்திருந்தது. உற்சாகம் அடைந்த பேராசிரியர் பச்சையப்பன் அவரை சேர்ந்த டில்லியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியப்படுத்துகிறார். இது உலகில் உள்ள மரபணு ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தியா தெரியபடுத்தப்படுகிறது.
ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்
மனித இனத்தின் மரபணு ஆராய்ச்சியில் தீவிரமாயிருந்த ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர் திரு. ஸ்பென்சர் வெல்ஸ்(Dr. Spencer Wells) இந்த முடிவைப் பார்த்ததும் உற்சாகம் கொண்டார். விருமாண்டியின் சொந்த ஊரான சோதிமாணிக்கத்தில் திரு.ஸ்பென்சர் வெல்ஸ் மற்ற முக்குலத்தோர்களையும் ஆய்வு செய்ததில் அதே M130மரபணு இருப்பதை அறிந்தார்கள்.
 மறுபரிசீலனை
முதல் மனிதன் ஆப்பரிக்க கண்டத்தில்தான் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு. சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு இன்று மறுபரிசீலனை செய்யப்படுகிறது. இந்த முதல் தமிழ் மனிதனை தேடி தமிழ் மண்ணில் ஆராய்ச்சியாளர்கள் வரவு தொடர்கிறது
சோதிமாணிக்கம் (உசிலம்ப்பட்டி அருகேயுள்ள கிராமம்)
விருமாண்டியின் சொந்த ஊரான சோதிமாணிக்கத்தில் (உசிலம்பட்டி அருகேயுள்ள கிராமம்) திரு.ஸ்பென்சர் வெல்ஸ்(Dr. Spencer Wells) மற்ற முக்குலத்தோர்களையும் ஆய்வு செய்ததில் அதே M130 மரபணு இருப்பதை அறிந்தார்கள். மரபணு இந்தனை யுகங்கள் கடந்தும் கலப்பற்று இருப்பதை அறிந்து வியந்தார். அவர் எழுதிய மரபணு சோதனைப் பற்றிய புத்தகத்தில்(Deep Ancestry) விரும்மாண்டி ஆண்டித்தேவர் பற்றி குறிப்பிட்டு எழுதினார். முக்குலத்தோர் D.N.A சேகரிப்பு மேலும் நடந்துக்கொண்டிருக்கிறது.


அதிகாரபூர்வமான அறிவிப்பு
2010 ஜூன் மாதம், இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில், மனித இனத்தின் முதல் குடும்பங்களில் ஒன்று தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் செய்தியை அனைவருமறிய அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்
  
முதல் தமிழ்குடி
முக்குலத்தோர்கள் முதலில் தோன்றிய நிலம் தமிழ்நிலம். முதலில் உருவான மொழி தமிழ்மொழி.
முதலில் உருவாக்கப்பட்ட பண்பாடு தமிழ்ப்பண்பாடு என்ற வரலாற்று உண்மை, விருமாண்டியின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
நீங்களும் முயற்சிக்கலாம்
உங்களையும் மரபணு சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளலாம். தகவலுக்கு இந்த இனைய முகவரி செல்க..http://www.familytreedna.com/y-dna-compare.aspx
- ஆர்.தியாகு
ஆதாரங்கள்:-
Books:
Deep Ancestry
Author: Dr. Spencer Wells
(Director of world Genographic Project.)
In Chapter 5, Page no: 116 Dr. Spencer Wells explained about “Virumandi Andithevar” DNA Story
Vijay TV :
நடந்தது என்ன? - நிகழ்ச்சி
மரபணு சோதனையாளர்களின் இனையதளம்.
(உங்கள் டி.என்.ஏ வையும் சோதனைக்க்கு உட்படுத்தலாம்)
Modern Faces give clues to Ancient Migration
English News Papers:
The Hindu
A project that aims at carrying the message of brotherhood
Evidence of first Indian settlers found in Tamil Nadu
The Indian Express News:
Journey of a man
Hindustan Times:
Geneticists identify first Indians
Business-standard News:
The story of civilization

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger